நேற்று வாழ்ந்ததை
இன்று இழப்பது
இறப்பு
இன்று இழந்ததை
நாளை பெறுவது
பிறப்பு.
யாருக்கு
என்று எப்போது
அறியாத சூழ்ச்சிச் சக்கரத்தில்
இன்றைய வாழ்வு.
சக்கரத்தை புறமொதுக்கி
நம்பிக்கை
கிளர்ந்தெழ
தளர்ந்தவனுக்கு
கரம் நீட்டி
சுற்றம் மகிழ
வாழ்வது
பெருவாழ்வு
எம்.கே.முருகானந்தன்