ஆதவனும் தலை சாய்த்தான்
மீனவர் குடிலின் பின்புறத்தே
சோர்வு உள்ளத்தில்
குடி கொள்ள,

‘ஏது எப்படி இவர்களால்
முடிகிறது.
நான் அயர்ந்து தூங்கும்
நள்ளிரவு தாண்டிய
இரு மணிநேரத்தில்
பாய் விரித்து படகோட்டி
குளிர் தோயக் கடல் உடுத்தி
வலை வீசும்
இவர்கள்
தொழில் நேர்த்தி
என்னிடமில்லை
யாரிடமும் கிடையாது.
தலை வணங்குகிறேன்
பணிவன்புடன் ‘
என்றவாறே..
காலை ஏழுக்கு கண் திறந்து
கொட்டாவி
ஊர் கூட்ட
சோம்பல் முறித்து
காப்பி அருந்தி
சாப்பிட்டு
மீண்டும் கண்ணயர்நது
மதியக் குழம்பிற்கு
மீன் வாங்க போவதற்கு
சோம்பி தயங்கி
அறா விலைக்கு பேரம் பேசும்
கூட்டத்திற்கு புரியுமா
உழைப்பின் மேன்மை
எம்.கே.முருகானந்தன்
0.00.0