தாமேயெனக்
தானும் தன்பாடுமாய்
ஒதுங்கிக் கிடத்தல் பொறுக்காது
யாரிவர்
இங்கெவரும் வாழ்தல் தகாது
நாம் தவிர
வெறியோங்கச் சூழுரைத்து
முறித்துப் பிடுங்கி வேரோடறுத்து
நாதியற வீசின
வன் கரங்கள்
இத்தனையாகியும்
இதமாய் மலர்ந்ததாய்
மென்நகை போர்த்தின விழிகள்
செந்நீர் சிந்தவில்லை
எம் இதயங்கள்
என்பது அதன் அர்த்தமல்ல
வேண்டாம்
வருத்தாதே!
வெண் மலர்கள்
சிந்திய கண்ணீர்
கூரிய வாள் ஒக்கும்.
எம்.கே.முருகானந்தன்
0.00.0
படமும் அருமை ஐயா…
வாழ்த்துக்கள்…