அம்மன் கோயில்
கொடியேறியதும்
அறைந்து வீசும் சோழகம்
திருவாய் மலர்ந்தது
அல்வாய்ப் பெண்மணி
கிணற்றில் நீரும் வற்றும்
மேலதிக தகவலும்
அவளது
மாவிலை கொட்டும்
அள்ளி மாளாது
பாளைகள் விமானமாய் பறக்கும்
பயிர்கள் தீயும்
வீட்டுப் பெண்களின் ஓலம்.
புழுதி மழையில்
பொன்னாடை சூடித் திணறும்
பூமி.
வாழை முறிந்து நிலத்தில் தவள
முற்றாத காய்களும்
வெம்பிப் பழுத்தது
என் வீட்டுச் சோகம்.
‘ஆடிகாற்றுக்கு அம்மியும்
பறக்குமாம்’
சும்மாவா சொன்னார்கள்.
எம்.கே.முருகானந்தன்
0.00.0