காகக்திற்கு அன்னம் வைத்தல்
காலாகாலமாக நம் வழக்கம்
சின்னதாக வாழையிலையில்
செஞ்சோறு கறியுடன், வடை மோர் மிளகாய்ப் பொரியல்
பப்படம் பாயாசம் தயிர் என அழகாய்ப் படைத்து
கா காக் கீச்சுக் குரலில்
காகம் போலக் கரைகுரலெடுத்து
ஊரெங்கும் கேட்க உயர்த்தி வாசிக்க
காகங்கள் கூட்டமாக விருந்துண்ட
காலமெல்லாம்
மறந்துபோன கதைகளில்தான்.
இன்றோ ?
மாடிவீட்டில் மசுங்கி மசுங்கி
கீழ் வீட்டார் தலையில்
அபிசேகமாகுமா பதைபதைப்புடன்
லன்ஞ் பேப்பரில் சுட்டி வைத்ததை
சாப்பிட வருவாராவென
அவதியோடு பார்த்திருந்தும்
காகங்கள் பிசியோ பிசி
காணவில்லை அருகெங்கும்.
காகங்கள் காணாதொழிந்ததில்
கொண்டாட்டம் எறுப்புகளுக்காம்
பெரும் கூட்டாக வந்து விருந்துண்டபோதும்
மிஞ்சிக் கிடக்கிறதாம் உணவின்னும்
அருமந்த மனைவியார்
நசுக்கிடாது நக்கலடிக்கிறார்.
எம்.கே.முருகானந்தன்.









