‘நோய் தீர்க்கும் மருத்துவருக்கும்
நோய் வந்ததே’
நக்கலாய் சொல்லடுக்கி
நகையடக்கி முகம் பார்த்தார்
மருந்தெடுக்க வந்த நோயாளி.
வேறொன்றுமில்லை
அடக்க முயன்றும் மீறிச்
சீறியிருந்தது என் தும்மல்
நஞ்சுண்ட சிவனா நான்?
எந்நோயும் அணுகாதென
இறுமாந்திருக்க?
இரும்பால் ஆனதல்ல இவ்வுடல்
தசையும் இரத்தமும்
சருமமும் சளியும் உண்டெனக்கும்.
அற்புதமான மூலிகை
இதன் பயனறிந்தால்
ஆச்சரியம் தாங்காதாம்.
சளி, ஜலதோஷம், இருமல் குணமாக்கும்
பற்றிட்டால் தலைவலை பறந்தோடும்
அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்
சிறுநோய்க் கோளாறு, மனநோய் மாறும்
தசை சுருங்காது, சருமம் மிருதுவாகும்
வாந்தி பறந்தோடும் என்றார்கள்.
பொக்கிசம் கிடைத்ததென
பசளையிட்டு பதமாக நீருற்றி
ஆசையோடு வளர்த்தேன்.
நன்றாக வளரும்
பிணி தீர்க்கக் கைகொடுக்கும்
என்றிருந்தேன்.
காலை கண் விழித்து
தோட்டத்தில் நோட்டமிட …
அந்தோ !!
ஓட்டை விழுந்து
அலங்கோலமாய் தளர்ந்த
இலைகளுடன் நாணியது
கற்பூரவல்லி.
நோய் தீர்க்கும் மருந்துக்கும்
பிணி வந்தடும்போது
மருத்துவர் என் செய்வார்
நோயும் பிணியும்
மூப்பும் மரணமும்
அவருக்கும்
நியதிதானே.
எம்.கே.முருகானந்தன்.
“நஞ்சுண்ட சிவனா நான்?
எந்நோயும் அணுகாதென
இறுமாந்திருக்க?”
“இரும்பால் ஆனதல்ல இவ்வுடல்
தசையும் இரத்தமும்
சருமமும் சளியும் உண்டெனக்கும்.”
“நோயும் பணியும்
மூப்பும் மரணமும்
அவருக்கும்
நியதிதானே.”
ஐயா, தங்கள் ஒவ்வொரு வரியும் தனி கவிதை.
தங்களின் படைப்பே தனி.
மிகவும் ரசித்தேன்…
அழகு…
கற்றுக் குட்டிக்கு இந்தப் பாராட்டு
அன்பிற்கு நன்றி பழனிவேல்
நன்றாக இருக்கு…கவிதை மூலம் மருத்துவம்.
நன்றி வடுவூர் குமார்.
இக் கவிதையில் மருத்துவமா?
ஆச்சரியம்.
Dr.M.K.Muruganandan,
வியாதிகளிலேயேக் கொடியது மூப்புதானே.நகைச்சுவையுடன்கூடிய மருத்துவக் கவிதை இனிமை.
நன்றி chitrasundar5
கவிதை நன்றாக இருக்கிறது.
உங்கள் அன்பிற்கு நன்றி கந்தசாமி ஐயா
கவிதை மூலம் , மூலிகை பற்றிய விளக்கம் அருமை .
நன்றி. மூலிகை எனது படிப்பில் கிடையாது.
இணையத்தில் தேடியதுதான்
நன்றி Gnanasekaran
நோய்தீர்க்கும் மருத்துவருக்கும் நோய் வந்ததே :))
இலையைச் சாப்பிட்ட பூச்சியாருக்கு நோய் தீர்ந்திருக்குமே :)))
மடக்கிவிட்டீர்கள் என்னை
நன்றி மாதேவி
‘நோய் தீர்க்கும் மருத்துவருக்கும்
நோய் வந்ததே’
நோய் தீர்க்கும் மருந்துக்கும்
பிணி வந்தடும்போது
மருத்துவர் என் செய்வார்
நோயும் பிணியும்
மூப்பும் மரணமும்
அவருக்கும்
நியதிதானே.
ஆரம்பம் முடிவு இரண்டுமே அற்புதம்!
மருத்துவர்களின் ‘பாடுகளைப்’ புரிந்து கொண்டமைக்கு நன்றி ranjani135
ungal kavithakal padithal maruthu thevai illai nanry iya….