அறிவுத் தேடலுக்கான இடம்
அழகின் இருப்பிடமும் கூட
பச்சைக் கம்பளம்
பசுமைத் தாவர அடைப்புகள்
ஓங்கி வளர்ந்த விருட்சங்கள்
உதிர்ந்த மலர் தூவிய பாதைகள்
மஞ்சளும் சிவப்பும்
ஊதாவும் நீலமும்
கறைபடியா வெள்ளையுமான
மலர்கள்
மலர்களின் சுகந்தத்தை
சுமந்து வரும் காற்று
கூட்டங்கள் கூடல்கள்
எத்தனை இன்பம்
பொதிந்து வைத்தாய்
யாழ் பொது நூலகமே
எப்படித் தான் மனசு வந்தது
உனக்கு தீ மூட்ட ……
எம். கே.முருகானந்தன்
0.00.0